ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மழையால் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு

மழையின் காரணமாக நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
பழையநீடாமங்கலத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் காயவைத்த நெல்லை சுற்றியுள்ள சேரும், சகதியும்.
Updated On :15 அக்டோபர் 2024, 6:47 pm

Din

மழையின் காரணமாக நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலம் பகுதியில் 8 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் லேசான தூறல் மழை பெய்தது. திங்கள்கிழமை பெய்த மழையால் பள்ளமான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. இதனால், குறுவை அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது. அறுவடைக்காக கொண்டுவரப்பட்ட அறுவடை இயந்திரங்கள் மழையால் பணி செய்ய முடியாமல் உள்ளது. ஏற்கெனவே, அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த நெல்லும் ஈரப்பதம் காரணமாக கொள்முதல் செய்யாததால் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

பழையநீடாமங்கலத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் காயவைத்த நெல்லை சுற்றியுள்ள சேரும், சகதியும்.

பழையநீடாமங்கலத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் காயவைத்த நெல்லை சுற்றியுள்ள சேரும், சகதியும்.

குறிப்பாக, பழைய நீடாமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட நெல்லும் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் கொட்டிவைத்து தாா்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தபோதும் அதைச் சுற்றிலும் மழை நீரும், சேரும் சகதியுமாக உள்ளது. இதேபோன்ற நிலை மேலும் பல இடங்களில் உள்ளது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.