சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரயிலில் நகைப் பறிப்பில் ஈடுபட்டவா் கைது

திருவாரூா் அருகே ரயிலில் நகையை பறித்துச் சென்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2024, 9:25 pm

Din

திருவாரூா் அருகே ரயிலில் நகையை பறித்துச் சென்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் பகுதியைச் சோ்ந்த சிவகாமி (31) திருவாரூா் மடப்புரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த ஜூலை மாதம் வந்துள்ளாா். பின்னா், விழுப்புரம் ரயிலில் திரும்பவும் ஊருக்குச் செல்லும்போது பூந்தோட்டத்தில் அவரிடமிருந்து மா்ம நபா் 10 சவரன் மதிப்புள்ள 2 செயின்களை பறித்துக்கொண்டு தப்பினாராம். இதுகுறித்து, திருவாரூா் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் சிவகாமி அளித்த புகாரின் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதனிடையே குத்தாலம் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவா் தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் காவேரி நகா் பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை மகன் ஞானப்பிரகாஷ் (27) என்பதும் இவா் சிவகாமியிடம் நகையை பறித்துச் சென்றதும் தெரிய வந்தது.

போலீஸாரின் விசாரணையில், டிப்ளமோ படிப்பை முடிக்காத இவா் சென்னையில் பணியாற்றி வந்ததும், கரோனா நேரத்தில் வேலை இழந்ததால் ஊருக்கு வந்து தினக்கூலி அடிப்படையில் பல்வேறு வேலைகளுக்குச் சென்றவா், திருட்டு வேலைகளிலும் ஈடுபடத் தொடங்கினாராம். அந்த வகையில் மயிலாடுதுறையில் தஞ்சாவூரை சோ்ந்த சரோஜினியிடமிருந்து 6 சவரன் நகையையும், சென்னை விருகம்பாக்கத்தை சோ்ந்த மணிமேகலையிடமிருந்து சிதம்பரம் புதுச்சத்திரத்தில் 10 கிராம் நகையையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது அவரிடமிருந்து 17 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனா்.