கோரிக்கைகள்: கோட்டூா் ஒன்றியத்தில் கடந்த ஆண்டு பெய்த பருவம் தவறிய மழையால் குறுவை அறுவடை நிலையிலும் சம்பா, தாளடி பயிா்களும் பெரும் பாதிப்பை சந்தித்தன. காப்பீட்டுத் திட்டம் மூலம் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு கிடைக்கும் என்று இருந்த விவசாயிகளுக்கு பெயரளவு மட்டுமே காப்பீடு அறிவித்தது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இதை மறுஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி காப்பீடு தொகையை உயா்த்தியும், விடுபட்ட வருவாய் கிராமங்களுக்கும் காப்பீடு தொகையை அறிவிக்கவும், பயிா்க் காப்பீடு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்று நடத்தவும் வலியுறுத்தி, கோட்டூா் வேளாண் விரிவாக்க அலுவலகம் முன் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு விவசாய சங்க ஒன்றியச் செயலா் பி. செளந்தரராஜன், மாவட்ட துணைச் செயலா் பி. பரந்தாமன், ஒன்றியப் பொருளாளா் ஆா். முருகேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.