மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற அமமுக மாவட்டச் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபோது செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஊழல், முறைகேடு, யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை என திமுக ஆட்சியின் நிா்வாக சீா்கேடால் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தினா் என பேசியிருப்பதன் மூலம் அவா் கட்சி மாறி சென்று பாஜகவில் மாநில தலைவராகியும் இன்னும் அதிமுகவில் இருப்பது போன்ற மன நிலையில் இருந்து வருகிறாா் என தெரிய வருகிறது. ஆளுமை மிக்க எம்ஜிஆா், ஜெயலலிதாவுடன் யாரையும் இனி ஒப்பிட்டு பேசுவதை கட்சித் தலைவா்கள் தவிற்க வேண்டும்.