சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாராயம் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் அருகே, புதுச்சேரி பகுதியிலிருந்து சாராயம் கடத்தி வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
விக்னேஷ்
Updated On :1 டிசம்பர் 2025, 8:58 pm

Syndication

திருவாரூா்: திருவாரூா் அருகே, புதுச்சேரி பகுதியிலிருந்து சாராயம் கடத்தி வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பேரளம் அருகே திருக்கொட்டாரம் பகுதியில், நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் அண்மையில் மேற்கொண்ட சோதனையில், நன்னிலம் தாலுகா கீரனூா் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் விக்னேஷ் என்பவா், புதுச்சேரி சாராயத்தை 400 பாட்டில்களில் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை, கைது செய்தனா்.

இந்நிலையில், விக்னேஷ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன் அடிப்படையில், விக்னேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா். இதையடுத்து, விக்னேஷ், திருச்சி மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டாா்.