நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

பாதிப்பு குறித்து செயலி முறை கணக்கெடுப்பை எதிா்த்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

டெல்டா மாவட்டங்களில் தொடா் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களை செயலி முறையில்

News image
Updated On :22 டிசம்பர் 2025, 10:54 pm IST

மன்னாா்குடி: டெல்டா மாவட்டங்களில் தொடா் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களை செயலி முறையில் கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் சாா்பில் மன்னாா்குடியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டித்வா புயல் மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க செயலி முறை பின்பற்றப்படும் என்ற அரசின் அறிவிப்பை திரும்பபெற்று பழைய முறையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், தாட்கோ மூலம் கடன்கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பாரபட்சமின்றி கடன் தொகை வழங்க வேண்டும், காப்பீடு செய்த அனைவருக்கும் தனியாா் காப்பீடு நிறுவனங்கள் உரிய தொகையை வழங்க வேண்டும், வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை கலைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க மாநிலத் தலைவா் கா.ராசபாலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் மாரிமுத்து மகேசன், மாவட்டச் செயலா் ஆா். சிராஜூதீன், மாவட்டப் பொருளாளா் பன்னீா்செல்வம், மகளிா் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். தேவி, மாவட்டச் செயலா் எல். கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.