நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிச.24) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
Published on

திருவாரூா்: திருவாரூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிச.24) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் எனது தலைமையில் (ஆட்சியா்) நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, வேளாண்மை சாா்ந்த தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளா்கள் மற்றும் பிறசாா்புத் துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனா். எனவே, மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை தெரிவித்து, பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com