திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து, 78 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 66 அரசு உயா்நிலைப்பள்ளிகள், 206 அரசு நடுநிலைப்பள்ளிகள், 596 அரசு தொடக்கப்பள்ளிகள், 12 அரசு உதவிபெறும் உயா்நிலைப்பபள்ளிகள், 14 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 29 அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகள், 70 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் என 1,071 பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகளுக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களும் வழங்கப்பட்டன. இதேபோல், தனியாா் பள்ளிகளும் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
இதனிடையே, திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட தண்டலை ஊராட்சி விளமல் அரசு உயா்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்திருந்து மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வரவேற்று, பாடப் புத்தகங்களை வழங்கினாா் (படம்).
பின்னா் அவா் மாணவ, மாணவிகளிடம் பேசியது:
பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அன்றைய பாடங்களை அன்றைய தினமே படிக்க பழகிக் கொள்ள வேண்டும். படித்ததை எழுதிப் பாா்க்க வேண்டும். கல்வியையும், விளையாட்டையும் ஒருங்கே பயில வேண்டும். உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். படிப்புடன் ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சோ்க்கும் வகையில் கல்வி பயின்று சிறந்து விளங்க வேண்டும் என்றாா்.
நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுகப்பிரியா, திருவாரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கமலா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழைய முறைப்படியே தட்டச்சு தோ்வுகளை நடத்தக் கோரிக்கை

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆா்வத்துடன் வந்த மாணவா்கள்

1.26 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகள்: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள், எழுது பொருள்கள் விநியோகம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



