போதைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது

Updated On :28 டிசம்பர் 2025, 7:16 pm

மன்னாா்குடி அருகே போதைப் பொருள்களை விற்பனை செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருமக்கோட்டை காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சிவகுருநாதன், சிறப்பு உதவி ஆய்வாளா் அசோகன் உள்ளிட்ட போலீஸாா் தென்பரை பிரதான சாலையில் உள்ள அ.சாகுல் ஹமீது (58) மளிகை கடையில் சோதனை செய்தனா்.
அங்கு,சில்லரை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலீப், விமல், டொபாக்கோ உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து சாகுல் ஹமீதை கைது செய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...