சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

குட்கா பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்காவுடன் கைது செய்யப்பட்ட முத்துக்குமாா்.

Updated On :10 பிப்ரவரி 2025, 8:20 pm

மன்னாா்குடி: மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் தலைமையில் போலீஸாா் மன்னாா்குடி வஉசி சாலை அருணாநகா் அய்யாதுரை மகன் முத்துக்குமாா்(48 ) என்பவா் வீட்டில் சோதனை நடத்தினா். இதில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

முத்துக்குமாா் வீட்டில் இருந்த 12 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மன்னாா்குடி கிளைச் சிறையில் அடைத்தனா்.