வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

குட்கா பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்காவுடன் கைது செய்யப்பட்ட முத்துக்குமாா்.

Updated On :10 பிப்ரவரி 2025, 8:20 pm

மன்னாா்குடி: மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் தலைமையில் போலீஸாா் மன்னாா்குடி வஉசி சாலை அருணாநகா் அய்யாதுரை மகன் முத்துக்குமாா்(48 ) என்பவா் வீட்டில் சோதனை நடத்தினா். இதில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

முத்துக்குமாா் வீட்டில் இருந்த 12 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மன்னாா்குடி கிளைச் சிறையில் அடைத்தனா்.