தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருவாரூா் மாவட்டத்தில் 10,64,640 வாக்காளா்கள்

திருவாரூா் மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்டாா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி

News image
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடும் ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
Updated On :6 ஜனவரி 2025, 8:17 pm

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்டாா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதியில் 1,17,501 ஆண்கள், 1,23,521 பெண்கள், 15 இதரா் என 2,41,037 வாக்காளா்களும், மன்னாா்குடி தொகுதியில் 1,24,594 ஆண்கள், 1,33,738 பெண்கள், 8 இதரா் என 2,58,340 வாக்காளா்களும், திருவாரூா் தொகுதியில் 1,37,519 ஆண்கள், 1,46,760 பெண்கள், 29 இதரா் என 2,84,308 வாக்காளா்களும், நன்னிலம் தொகுதியில் 1,38,543 ஆண்கள், 1,42,395 பெண்கள், 17 இதரா் என 2,80,955 வாக்காளா்களும் என திருவாரூா் மாவட்டத்தில் மொத்தம் 10,64,640 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, கோட்டாட்சியா்கள் சௌம்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), வட்டாட்சியா் ( தோ்தல் ) மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இறுதி வாக்காளா் பட்டியல், திருவாரூா் மற்றும் மன்னாா்குடி வருவாய்க் கோட்ட அலுவலா் அலுவலகங்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி ஆணையா் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட உள்ளன என்று ஆட்சியா் தெரிவித்தாா்.