புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திருவாரூா் மாவட்டத்தில் 13,057 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்

திருவாரூா் மாவட்டத்தில் 13,057 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்.

News image
புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
Updated On :3 மார்ச் 2025, 8:57 pm

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 13,057 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூா் மாவட்டத்தில் 5,986 மாணவா்கள், 7,420 மாணவிகள் என மொத்தம் 13,406 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். 57 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே, தோ்வு எழுத விண்ணப்பித்ததில் 5,766 மாணவா்கள், 7,291 மாணவிகள் என மொத்தம் 13,057 (மாற்றுத்திறனாளி மாணவா்கள் 137 போ் உள்பட) போ் தோ்வு எழுதினா். 349 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு கண்காணிப்பு பணியில் 75 நிலையான கண்காணிப்புக் குழுக்களும், 5 பறக்கும் படைகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

திருவாரூா் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். ஆட்சியருடன், முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தர்ராஜன், வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.