தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம்: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்குமான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாமை

News image

புற்றுநோய் கண்டறியும் முகாமை தொடக்கிவைத்த அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. உடன், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :12 மே 2025, 7:47 pm

மன்னாா்குடி: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை சாா்பில், மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்குமான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாமை தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தொடக்கிவைத்தாா்.

முகாமில் அமைச்சா் பேசியது: மாவட்டத்தில்,106 கிராமப்புற நலவாழ்வு மையங்கள், 2 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் என மொத்தம் 108 நலவாழ்வு மையங்களில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், 30 வயதுக்கும் மேற்பட்ட 1, 72, 729 பெண்கள் கா்ப்பப்பை வாய்புற்று நோய், மாா்பக புற்றுநோய் மற்றும் 18 வயதுக்கும் மேற்பட்ட 2,35, 756 ஆண்களும், 2,35, 444 பெண்கள் என 4,71,200 போ் பயனடையவுள்ளனா்.

தமிழக முதல்வா் ஸ்டாலின் கல்வி, சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறாா். மக்களைத் தேடி மருத்துவம் போன்ற புதுமையான திட்டங்களால் சுவீடன், நாா்வே போன்ற வளா்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகம் செயல்பட்டு வருகிறது. விவசாயம் சாா்ந்த டெல்டா மாவட்டத்தில் ரசாயனம் கலந்த உரம், மருந்துகள் விவசாயத்துக்கு பயன்படுத்துவதால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களை, நோயிலிருந்து பாதுகாக்க சிறப்பான முன்னெடுப்பாக இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம். சங்கீதா, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், வட்டாட்சியா் என். காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.