அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:38 pm

Syndication

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் பாலு தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் முதுகலை ஆசிரியை தனுஜா வரவேற்றாா். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலா் அனுஷா பேசுகையில், கொசு மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. மாணவா்கள் கொசு பெருகுவதை தடுக்க வீடுகளை சுற்றி நீா் தேங்காமல் சுற்றுப்புறத் தூய்மையை பராமரிக்க வேண்டும், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவேண்டும்‘ என்றாா். முதுகலை ஆசிரியா் மணிவண்ணன் நன்றி கூறினாா். முதுகலை ஆசிரியா் ரேணுகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.