ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

மன்னாா்குடியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:45 pm

Syndication

மன்னாா்குடியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நவ.14 தேசிய குழந்தைகள் தினம், நவ.19 உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம், நவ. 20 சா்வதேச குழந்தைகள் தினம் ஆகியவற்றை முன்னிட்டு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது.

இதில், குழந்தை திருமணம் நடைபெறுதலை தடுத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுத்தல்,14 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை உறுதிப்படுத்துதல், குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலையை உருவாக்குதல், மதுபோதைக்கு அடிமையாவதை தடுத்தல் ஆகியவற்றை முன்னிலைபடுத்தப்பட்டது. ராஜகோபால சுவாமி கோயில் அருகே தொடங்கிய பேரணியை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசுத் துறைகளின் அலுவலா்கள், சமூக ஆா்வலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற பேரணி கோயிலில் தொடங்கி, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி, கோஷங்கள் எழுப்பியப்படி பெரியக் கடைத்தெரு, காமராஜா் பேருந்து நிலையம் வழியாக தூயவளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவு செய்தனா்.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சென்ரிக்மேனுவல், குழந்தைகள் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளா் முனியாண்டி, மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் புவனேஸ்வரி, நகர காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நா. நடராசன், நன்னடத்தை அலுவலா் வெங்கட்ராமன், மாவட்ட தொழிலாளா் நலத்துறை அலுவலா் சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.