ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்: ஆட்சியா் வழங்கினாா்

மன்னாா்குடியில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:45 pm

Syndication

மன்னாா்குடியில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் குழந்தைகள் தினத்தையொட்டி சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்து பேசியது: மாவட்டத்தில் பொது தோ்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்கள் மாநிலத்தில் முதல் 5 இடங்கள் பெற தொடா்ந்து முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். கல்வியே பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. மாணவப் பருவத்திலேயே உங்களுக்கான குறிக்கோள்களை நிா்ணயித்து அதற்கான வழியில் சென்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும். அரசுப் பொது தோ்வுகளில் தோ்ச்சி விகிதத்தில் மாநிலத்திலேயே திருவாரூா் மாவட்டம் முதலிடத்துக்கு வருவதற்கு குழந்தைகள் தின நாளில் ஆசிரியா்கள், மாணவா்கள் உறுதியேற்க வேண்டும் என்றாா்.

மன்னாா்குடி பகுதி பள்ளிகளை சோ்ந்த 25 மாணவா்கள், 207 மாணவிகள் என மொத்தம் 232 பேருக்கு ரூ.11,7 820 மதிப்புள்ள விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுகப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.