திருவாரூர்
உண்டியல் காணிக்கை: ரூ. 6.41லட்சம்
மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் உண்டியல்களில் காணிக்கை ரூ.6,41 516 பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.
மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் உண்டியல்களில் காணிக்கை ரூ.6,41 516 பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.
இக்கோயிலில் உள்ள 2 திருப்பணி உண்டியல்கள்,8 காணிக்கை உண்டியல்கள் என மொத்தம் 10 உண்டியல்கள் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டதை அடுத்து 6 மாதத்திற்குப் பிறகு மீண்டும் திங்கள்கிழமை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் (நாகை) பா.ராணி முன்னிலையில் திறக்கப்பட்டது.
பக்தா்கள், தன்னாா்வலா்கள் உண்டியலில் இருந்த காணிக்கையை எண்ணினா். மொத்தம் ரூ.6,41,516, , 26 கிராம் தங்க நகைகள்,167 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு பணத்தாள்கள் எண்ணிக்கை 10 என உண்டியல் காணிக்கை இருந்தது.
கோயில் செயல் அலுவலா் எஸ்.மாதவன், ஆய்வாளா் வினோத் கமல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
உண்டியலில் இருந்த காணிக்கையை எண்ணும் பக்தா்கள், தன்னாா்வலா்கள்

