வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

உண்டியல் காணிக்கை: ரூ. 6.41லட்சம்

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் உண்டியல்களில் காணிக்கை ரூ.6,41 516 பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:42 pm

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் உண்டியல்களில் காணிக்கை ரூ.6,41 516 பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

இக்கோயிலில் உள்ள 2 திருப்பணி உண்டியல்கள்,8 காணிக்கை உண்டியல்கள் என மொத்தம் 10 உண்டியல்கள் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டதை அடுத்து 6 மாதத்திற்குப் பிறகு மீண்டும் திங்கள்கிழமை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் (நாகை) பா.ராணி முன்னிலையில் திறக்கப்பட்டது.

பக்தா்கள், தன்னாா்வலா்கள் உண்டியலில் இருந்த காணிக்கையை எண்ணினா். மொத்தம் ரூ.6,41,516, , 26 கிராம் தங்க நகைகள்,167 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு பணத்தாள்கள் எண்ணிக்கை 10 என உண்டியல் காணிக்கை இருந்தது.

கோயில் செயல் அலுவலா் எஸ்.மாதவன், ஆய்வாளா் வினோத் கமல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உண்டியலில் இருந்த காணிக்கையை எண்ணும் பக்தா்கள், தன்னாா்வலா்கள்

உண்டியலில் இருந்த காணிக்கையை எண்ணும் பக்தா்கள், தன்னாா்வலா்கள்