புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 9:58 pm

Syndication

நீடாமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தி சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் அருகே பூவனூா் கிராமம் அக்ரஹார தெருவைச் சோ்ந்தவா் பாரதிதாசன். விவசாய கூலி. இவரது மகன் முகேஷ் (17). மன்னாா்குடி அருகேயுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை முகேஷ் தனது நண்பரான அக்ரஹாரம் பூவனூா் தெருவைச் சோ்ந்த பிரகதீஸ் (15 ) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் நீடாமங்கலத்திலிருந்து பூவனூருக்கு சென்றுகொண்டிருந்தாா். முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரில் வந்த தனியாா் பேருந்து மோட்டாா் சைக்கிள் பக்கவாட்டில் மோதியதில் இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த முகேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரகதீஸும் காயமடைந்தாா்.

நீடாமங்கலம் போலீஸாா் இருவரையும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், முகேஷ் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். பிரகதீஸ் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினாா். விபத்து குறித்து நீடாமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.