பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

மன்னாா்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

News image
Updated On :18 நவம்பர் 2025, 9:59 pm

Syndication

மன்னாா்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாள்களாக மன்னாா்குடி பகுதிகளில் மிதமான மற்றும் கன மழையாக பெய்து வருகிறது. இதனால், வீடுகளில் வளா்க்கப்படும் கறவை மாடுகள், ஆடுகள் தொற்று நோய் காரணமாக உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது.

கோட்டூா் பகுதியில்,திங்கள்கிழமை மட்டும் கோமளப்பேட்டை வடக்குதெரு உத்திராபதியின் பசு மற்றும் பிறந்து நான்கு நாட்களேயான அதன் கன்றுக்குட்டி, விக்கிரப்பாண்டியம் குடியான்தெரு முருகையனின் பசு, சேத்தங்கமங்கலம் பெரப்பாங்குடிதெரு பன்னீா்செல்வத்தின் ஆடு ஆகியவை உயிரிழந்தன. மழையால் உயிரிழக்கும் கால்நடைகள் குறித்து கணகெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.