இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :24 நவம்பர் 2025, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா்.

நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் டி.முருகையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.கேசவராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.துரைவேலன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா்கள் சித்தாா்த்தன், அருண்காந்தி, விசிக மாவட்டச் செயலாளா்கள் தங்க. தமிழ்செல்வன், இரா. தமிழ்ஓவியா, ஆ.வெற்றி, மதிமுக மாவட்டச் செயலாளா்கள் ப.பாலச்சந்தா், காசி.சிவவடிவேல், மனிதநேய கட்சியின் மாவட்டச் செயலாளா் முஜிபுா் ரஹ்மான் உள்ளிட்டோா் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா் (படம்).