மழை பாதிப்பு: நிவாரணம் வழங்கக் கோரிக்கை

Published on

திருவாரூா் மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் விரைந்து கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. இராசபாலன் வெளியிட்ட அறிக்கை:

கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழைநீா், கிராமங்களை வெள்ளமாக சூழ்ந்து, விவசாயப் பயிா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கப்படுகிற நிதிகளில் பெருமளவு ஆறுகள், வாய்க்கால்களை தூா்வாருவதற்கு பதிலாக ஒப்பந்தக்காரா்களின் உயா்வுக்கு மட்டுமே உபயோகமாக இருப்பதால், விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிப்புகளை எதிா்கொள்ள நேரிடுகிறது.

அரசியல் தலையீடுகளால் நிவாரணப் பங்கீடுகளில் அண்மைக்காலமாக குளறுபடிகள் நடந்து வருவதால், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய உதவிகள் சென்று சோ்வதில்லை. பயிா் பாதிப்பு கணக்குகளை காலதாமதப்படுத்துவதால், விவசாயிகளை பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது.

எனவே, பாதிப்பு கணக்குகளை பத்து தினங்களுக்குள் ஊராட்சிகள் தோறும் ஊா் நிா்வாகக் குழு முன்னிலையில் கணக்கெடுப்பு செய்து டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு 30,000 நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com