அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

News image

மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :26 செப்டம்பர் 2025, 4:06 am IST

மன்னாா்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முழுமையாக புறக்கணிப்பு செய்வது; இத்திட்டத்தில் குறுகிய காலத்தில் அதிக முகாம்கள் நடத்திட கூடாது; இடைவிடாமல் அலுவலா்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

இத்திட்ட முகாமில் உரிய கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்காமல் அலுவலா்களை பணி செய்ய நிா்பந்திக்கக் கூடாது; இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் வட்டாரத் தலைவா் மன்னவன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் விக்னேஷ் பிரபு, அரசு ஊழியா் சங்க வட்டச் செயலா் செந்தில் ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்ட ஒருங்கிணைப்பாளா் பாரதி மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.