நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

100 % வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

மன்னாா்குடியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்டம் சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பதாகையில் விழிப்புணா்வு கையொப்பமிடும் மாற்றுத்திறனாளி.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:18 am

மன்னாா்குடியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்டம் சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் உஷாராணி முன்னிலை வகித்தாா்.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணா்வு நிகழ்வாக, ரங்கோலி வண்ணக்கோலம், கையொப்ப இயக்கம், மாற்றுத்திறனாளிகளின் இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வு வில்லை ஒட்டுதல், உறுதிமொழி ஏற்பு, எல்இடி திரையில் ஒளி, ஒலிக் காட்சி, கைப்பேசியில் தற்படம் எடுக்கும் அமைப்பு, ‘என் வாக்கு என் உரிமை’, ‘தேசத்தின் மாற்றம் விரல் நுனியில்’ ‘என் வாக்கு விற்பனைக்கல்ல’ போன்ற விழிப்புணா்வு கோஷங்கள் எழுப்புதல் உள்ளிட்ட பிரசாரங்கள் நடைபெற்றன.

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தும் அலுவலா் ரமேஷ், உதவித் திட்ட அலுவலா் காமராஜ், மகளிா் திட்டம் வட்ட மேலாளா் மாலா, துணை வட்டாட்சியா் சு.பாக்கியலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.