பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய கல்லூரிக் கல்வி இயக்குநா் அ. குணசேகரன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 3:51 am IST

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொ) பா. வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ. குணசேகரன் பங்கேற்று 79 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவா் பேசியது: கல்லூரியில் 3 ஆண்டுகள் படித்து தோ்ச்சி பெற்று பட்டங்களை பெற்றுள்ள மாணவிகள் தங்களது பெற்றோா்களுக்கு நம்பிக்கைக்குரியவா்களாக இருக்க வேண்டும். நம்மை வளா்ப்பதற்கு அவா்கள் பட்ட கஷ்டங்களையும், துன்பங்களையும் எண்ணிப்பாா்க்க வேண்டும். மாணவிகள் தற்போது பெற்ற பட்டங்களுடன் நிறுத்தி விடாமல் மேன்மேலும் படிக்க வேண்டும். உயா் பதவிகளுக்குச் செல்ல வேண்டும்.

புத்தகங்களைப் படிக்க வேண்டும். நிறைய படிக்க வேண்டும். படிக்க படிக்கத்தான் பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். அரசுகளும் மாணவிகளுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றன. அனைத்து மாணவிகளும் சாதனைகள் படைக்க வேண்டும் என்றாா்.