ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 6:38 pm

மன்னாா்குடி அருகே மது போதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெரு வீரமணி மகன் காா்த்திக் (45). மதுக் குடிக்கும் பழக்கம் உள்ள இவா், அதிலிருந்து மீள, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா். அண்மைகாலமாக, மன்னாா்குடியை அடுத்துள்ள பெருவிடைமருதூரில் அவரது மூத்த சகோதரி சசிகலா வீட்டில் தங்கியிருந்தாா்.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றின் மீது அமா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மதுக்குடித்தாராம். அப்போது, போதையில் நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து, கிணற்றுக்குள் இறங்கி பாா்த்தபோது, காா்த்திக் இறந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.