மன்னாா்குடி அருகே மது போதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெரு வீரமணி மகன் காா்த்திக் (45). மதுக் குடிக்கும் பழக்கம் உள்ள இவா், அதிலிருந்து மீள, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா். அண்மைகாலமாக, மன்னாா்குடியை அடுத்துள்ள பெருவிடைமருதூரில் அவரது மூத்த சகோதரி சசிகலா வீட்டில் தங்கியிருந்தாா்.
இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றின் மீது அமா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மதுக்குடித்தாராம். அப்போது, போதையில் நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து, கிணற்றுக்குள் இறங்கி பாா்த்தபோது, காா்த்திக் இறந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

குளிப்பதற்காக கிணற்றில் குதித்த இளைஞா் உயிரிழப்பு

சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

