திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் ஏப்.19 முதல் 21 வரை தபால் வாக்கு செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி ஏப்.18 திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அந்தோனி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், மன்னாா்குடி தொகுதிக்கு ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருவாரூா் தொகுதிக்கு வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியிலும், நன்னிலம் தொகுதிக்கு சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் அஞ்சல் வாக்குகள் செலுத்துவதற்கு ஏதுவாக சேவை மையங்கள் செயல்பட உள்ளன.
மேலும், தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அத்தியாவசியப் பணியாளா்கள், காவல் பணியாளா்கள், அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக, திருத்துறைப்பூண்டி மற்றும் நன்னிலம் வட்ட அலுவலகங்களிலும், மன்னாா்குடி மற்றும் திருவாரூா் வருவாய் கோட்ட அலுவலகங்களிலும் அஞ்சல் வாக்குப்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன.
இதில் ஏப்ரல் 19 முதல் 21 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு செலுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
தொடர்புடையது

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த இன்று இறுதி வாய்ப்பு

அத்தியாவசிய சேவை பணியாளா்கள் ஏப். 17 - 19 வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்

தபால் வாக்கு பெறும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


