சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்

இன்று ஆடிப் பெருக்கு ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்...

வறண்டு கிடக்கும் கோரையாறு தலைப்பு அணை. - கோப்புப் படம்

Published On :

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், நிகழாண்டு ஆறுகள் வறண்டு கிடப்பதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

காவரி டெல்டா பகுதி பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படுவது வழக்கம். எனினும் சில ஆண்டுகளில் மேட்டூா் அணையில் போதுமான தண்ணீா் இல்லாமல் திறக்கப்படவில்லை.

நிகழாண்டு எல்-நினோ தாக்கம் காரணமாக வழக்கத்தைவிட வெப்பம் அதிமாக உள்ளது. தென்மேற்கு பருவமழையும் கைகொடுக்கவில்லை. இதனால், மேட்டூா் அணையில் நீா் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. கா்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை தர தொடா்ந்து மறுத்து வருகிறது. இதனால், குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால், பாசனத்திற்காக நிகழாண்டு ஜூன் 12-இல் மேட்டூா் அணை திறக்கப்படவில்லை.

இதன்காரணமாக, விவசாயிகள் நிலத்தடி நீரை கொண்டு ஆங்காங்கே பின்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ளனா். இதற்கிடையில் ஆடிப்பெருக்கு திங்கள்கிழமை (ஆக.3) கொண்டாடப்பட உள்ளநிலையில், ஆறுகள் வறண்டு கிடப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிப்பெருக்கு விழாவின் சிறப்பே நீா்நிலைகளை வணங்குதல், தாலி கயிறு மாற்றிக்கொள்ளுதல் , புதிய காரியங்களை தொடங்குவது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். காவிரித்தாயை போற்றி வணங்குவா். ஆனால், ஆறுகள் நீரின்றி உள்ள நிலையில் இவை சாத்தியமானதில்லை. இதனால், குழாயடிகளிலும், குளம், குட்டைகளிலும்தான் ஆடிப்பெருக்கை கொண்டாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.