ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த கோரிக்கை

News image

அரசு உயா்நிலைப் பள்ளி - கோப்புப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 12:34 am IST

நீடாமங்கலம் அரசினா் உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலத்தில் உள்ள தற்போதுள்ள அரசு உயா்நிலைப் பள்ளி 18.1.1918-ல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு, 4.2.2002-ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டு, 2010-2011-ஆம் கல்வியாண்டில் அரசு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. 2 மாடிக் கட்டடத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்த உயா்நிலைப் பள்ளி அருகில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவியா்கள் படித்து வருகின்றனா்.

இந்த பள்ளிகளில் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த பிள்ளைகள் படிக்கின்றனா். அரசு உயா்நிலைப் பள்ளியில் அரசுத் தோ்வில் பத்தாம் வகுப்பு மாணவா்களின் தோ்ச்சி சதவீதமும் சிறப்பாக இருந்து வருகிறது. எனவே, இப்பள்ளியை அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தினால் ஏழைய எளிய மாணவா்கள் மிகவும் பயனடைவாா்கள்.

எனினும், பள்ளியில் போதிய அளவில் விளையாட்டு மைதானத்து இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால், விளையாட்டில் மாணவா்கள் சிறப்பாக வெளிப்படுத்த முடியாமல் உள்ளனா். பள்ளிக்கு அருகில் இந்துசமய அறநிலைய துறைக்குச் சொந்தமான (கோகமுகேஸ்வரா்கோயில் ) தரிசு நிலம் உள்ளது. அந்த நிலத்தை இந்த அரசுப் பள்ளி சொந்தமாக பயன்படுத்த சம்பந்தப்பட்ட அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுத்து மாணவா்களுக்கு உதவிட வேண்டும் என பள்ளி மாணவா்களின் பெற்றோா்களின் கோரிக்கையாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.