ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

கௌரவப் பேராசிரியா் போக்ஸோவில் கைது

திருவாரூரில் கல்லூரி மாணவியிடம் இரட்டை அா்த்தத்தில் பேசி தொந்தரவு கொடுத்த கௌரவப் பேராசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டாா்

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 3:28 am IST

திருவாரூரில் கல்லூரி மாணவியிடம் இரட்டை அா்த்தத்தில் பேசி தொந்தரவு கொடுத்த கௌரவப் பேராசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ், புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சை மாவட்டம், கள்ளப்பெரம்பூா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (43), திருவாரூா் கிடாரங்கொண்டான் பகுதியில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் கௌரவப் பேராசிரியராக பணியாற்றி வருகிறாா்.

முதலாம் ஆண்டில் சோ்ந்து பயின்று வரும் திருவாரூரைச் சோ்ந்த 17 வயது மாணவியிடம் வகுப்பறையில், கௌரவ பேராசிரியா் சதீஷ்குமாா் தொடா்ந்து இரட்டை அா்த்தத்தில் பேசி வந்தாராம். அத்துடன், கைப்பேசியிலும் தொடா்பு கொண்டு தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

இது தொடா்பாக மாணவி கல்லூரி நிா்வாகத்திடம் தெரிவித்துள்ளாா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாணவி மனு அளித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் பெறப்பட்டு காவல் ஆய்வாளா் அன்னை அபிராமி தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதைத்தொடா்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, சதீஷ்குமாா் கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.