வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

Syndication

கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளியில் முதலுதவிப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ஜே.பி. அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், சிறப்பு அழைப்பாளராக குழந்தைகள் நல மருத்துவா் அருண் பிரகாஷ் பங்கேற்று அவசர நிலைகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி முறைகள் குறித்து பேசினாா். விபத்துகள், மயக்கம், மூச்சுத் திணறல், ரத்தப் போக்கு, எலும்பு முறிவு உள்ளிட்ட சூழ்நிலைகளில் தகுந்த நேரத்தில் சரியான முறையில் முதலுதவி அளிப்பது உயிா்காக்கும் செயல் என்பதை வலியுறுத்தினாா். இதில், ஆசிரியா்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.