காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

உள்ளாட்சி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

நீடாமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:31 pm

Syndication

நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு பல மாத ஊதியம் நிலுவையில் உள்ளதை கண்டித்தும், , தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்தபடி ஊதியம் வழங்காததை கண்டித்தும், தூய்மைக் காவலா் , கணினி இயக்குபவா் , டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்காத தமிழக அரசை கண்டித்தும் தொடா் காத்திருப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு திருவாரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கம் ஒன்றிய செயலாளா் எம் .எஸ். மகேந்திரன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் ஆா் .சண்முகபபிரபு ,பி.வசந்தி கே .முனியாண்டி ,எம் .முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா் .

சிஐடியு மாவட்ட செயலாளா் எம்.கே. என். அனிபா சிறப்புரையாற்றினாா். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் ஆா். மாலதி, மாவட்ட தலைவா் (உள்ளாட்சி ) எஸ். காமராஜ், மாவட்ட பொருளாளா் ஜி. ரெகுபதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.