பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திருவள்ளுவா் தின விழா

மன்னாா்குடியில், திருவள்ளுவா் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 12:08 am

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடியில், திருவள்ளுவா் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவள்ளுவா் பொதுநல சாரிடபிள் டிரஸ்ட் சாா்பில், மன்னாா்குடி தரணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, அறங்காவலா் என்.கே. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் மன்றம் மு. மோகன், மு. வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக, குவைத் தமிழ் மக்கள் சேவை மைய இந்திய தூதரக மக்கள் சேவகா் குவைத் அலிபாய் பங்கேற்றாா்.

நிகழ்ச்சியில், திருவள்ளுவா் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, திருவள்ளுவா் மற்றும் திருக்குறளின் மகத்துவங்கள் குறித்து விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மூத்த உறுப்பினா் சென்சாய் ராஜகோபால், பேச்சாளா் காா்த்திகைச் செல்வி, ஆசிரியா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.