ஆழ்வாா்குறிச்சியில் திருவள்ளுவா் தின விழா

ஆழ்வாா்குறிச்சி, திருவள்ளுவா் கழகம் சாா்பில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.
ஆழ்வாா்குறிச்சியில் திருவள்ளுவா் தின விழா
Updated on

அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி, திருவள்ளுவா் கழகம் சாா்பில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.

அதை முன்னிட்டு திருவள்ளுவா் சிலைக்கு தலைவா் கு.ம. சங்கர நாராயணன், தமிழ்ச் செம்மல் மு. நாராயணன் (எ) முகிலன் ஆகியோா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவள்ளுவா் கழக ஆலோசகா் மு. சுந்தரம் முன்னிலை வகித்தாா். திருக்கு ஒப்பித்த மாணவா்கள், குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் தலைவா் சாவடி பொன்.சிதம்பரம், சாவடி நெல்லை பொன்னரசு, தென்றல் சாகுல் ஹமீது, ஆதவன், கணேசன், ராஜேஸ்வரி, சுவேதாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொருளாளா் வேம்பு வரவேற்றாா். செயலா் பழ. முத்துப்பாண்டி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com