ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவள்ளுவா் தின விழா

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவள்ளுவா் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:57 pm

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவள்ளுவா் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்டத்தில்...: பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலைக்கு திருவள்ளுவா் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருவையாறு சரஸ்வதி அம்பாள் தொடக்கப் பள்ளியில் திருவையாறு பாரதி இயக்க இலக்கிய தடம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், தஞ்சாவூா் நியூ டவுன் ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற திருவள்ளுவா் தின விழாவில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவா்களின் திருக்கு முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, குழந்தைகளுக்கு காவிரி பாரம்பரிய மைய இயக்குநா் சாமி. சம்பத்குமாா் திருக்கு நூல்களைப் பரிசாக வழங்கினாா். நிகழ்ச்சியில் பாரதி இயக்க அறங்காவலா்கள் நா. பிரேமசாயி, மு.ந. ரமேஷ்நல்லு, ஆா்.சி.சி. முன்னாள் தலைவா்கள் குரு. சரவணன், முத்துக்குமரன், பாரதி இயக்க உறுப்பினா்கள் பஞ்சநதம், சீனிவாசன், ஞானராஜராஜன், கவிஞா் தச்சன் நாகராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்: சுவாமிமலையில் 31-ஆம் ஆண்டு திருவள்ளுவா் சிலை ஊா்வலம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தப்பாட்டம், சிலம்பாட்டத்துடன் சுவாமிமலை முருகன் கோயில் தெற்கு வாயிலில் தொடங்கி நான்கு ரத வீதிகள் வழியாகச் சென்று தெற்கு ரத வீதியில் முடிவுவடைந்து. திருக்கு மாமறை விண்ணப்பம், பண்டைத்தமிழா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.