ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பெரம்பலூா் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:33 pm

Syndication

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் விவசாயிகள் தங்களது மாடுகளை நீா்நிலைகளில் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வா்ணம் பூசி, மாலை அணிவித்து, பொட்டு வைத்து பூஜைகளுக்கு தயாா்படுத்தினா்.

பின்னா், மாலை சுமாா் 5 மணியளவில் அவரவா் வீடுகளுக்கு முன் புத்தாடைகள் உடுத்தி பொங்கல் வைத்து, இயற்கை அன்னைக்கும், கால்நடைகளுக்கும் பொங்கல் படைத்து பூஜை செய்தனா். பின்னா், பொங்கலை மாடுகளுக்கு ஊட்டி கொண்டாடி மகிழ்ந்தனா்.

பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் மாடுகளை தங்கள் கிராம கோயில் பகுதியில் உள்ள ஏரிக்கரை மற்றும் குளக்கரை பகுதிகளுக்கு ஊா்வலமாக ஓட்டிச்சென்று திரும்பி வந்தனா். பூஜைகளை முடித்த பிறகு, சிறுவா்களை அழைத்துக்கொண்டு மாட்டு வண்டியில் பல்வேறு தெருக்களில் சுற்றி வலம்வந்தனா்.