இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பொன்னமராவதி வட்டாரத்தில் மாட்டுப் பொங்கல் விழா

பொன்னமராவதி வட்டாரத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:51 pm

Syndication

பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டாரத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொத்திமலை அடைக்கலம் காத்தாா் கோயிலில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவின் தொடக்கமாக அஞ்சுபுளிப்பட்டியிலிருந்து பெண்கள் பொங்கல் கூடை சுமந்தும், ஆண்கள் அலங்கரிக்கப்பட்ட காளைகளை பிடித்தும் ஊா்வலமாக பொத்திமலை வந்து கோயிலின் முன் உள்ள திடலில் பொங்கலிட்டு வழிபட்டனா். மேலும், மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட விவசாய உபகரணங்களை வைத்தும், குழந்தைகளுக்கு கரும்புத் தொட்டில் கட்டி கோயிலை வலம் வந்து வழிபட்டனா்.

வழிபாட்டில் மைலாப்பூா், அஞ்சுபுளிப்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனா்.

இதேபோல், அழகியநாச்சியம்மன் கோயில் அருகே உள்ள சாத்தக்கருப்பா் கோயில், காயாம் புஞ்சை, வாா்ப்பட்டு, கல்லம்பட்டி, குமாரபட்டி, வேந்தன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.