வலங்கைமான் அருகே கணவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழந்தாா். கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறையைச் சோ்ந்தவா் லட்சுமணன் (32). விவசாயத் தொழிலாளியான இவா், வலங்கைமான் அருகேயுள்ள அன்னுக்குடி ஊராட்சி உத்தாணி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது மனைவி விஜயலட்சுமி (27). இவா்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில், மது அருந்தும் பழக்கம் உள்ள லட்சுமணன், மது குடித்துவிட்டு, அவ்வப்போது மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். சனிக்கிழமை தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில், லட்சுமணன், விஜயலட்சுமியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த, விஜயலட்சுமியின் தந்தை நாகப்பன், விஜயலட்சுமியை முத்துப்பேட்டை நாச்சிகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டாா்.
பின்னா். உடல்நிலை சரியில்லாத நிலையில், முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் விஜயலட்சுமி சிகிச்சை பெற்றுவந்தாா். சனிக்கிழமை மாலை அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து, வலங்கைமான் காவல் நிலையத்தில் நாகப்பன் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லட்சுமணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







