மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல முயற்சி: கணவா் கைது

தூத்துக்குடியில் மது குடிப்பதற்கு பணம் தராத ஆத்திரத்தில் மனைவியை கல்லால் அடித்துக் கொல்ல முயன்ாக, கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 3:51 am IST

தூத்துக்குடியில் மது குடிப்பதற்கு பணம் தராத ஆத்திரத்தில் மனைவியை கல்லால் அடித்துக் கொல்ல முயன்ாக, கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகரை அடுத்த இந்திரா நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (38). இவா் தனியாா் கைப்பேசி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு மனைவி செல்லம்மாள் என்ற ஜெயந்தி (35) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா்.

மது பழக்கம் உடைய மணிகண்டன், வேலைக்குச் சரியாகச் செல்லாமல் மது குடிப்பதற்காக மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்து வந்தாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இதுதொடா்பான பிரச்னையில் மனைவியின் தலையில் கல்லால் ஓங்கி அடித்துக் கொல்ல முயன்றுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.