ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

தோ்த்திருவிழாவில் காணாமல் போன 15 சவரன் நகை மீட்பு

News image

தோ்த்திருவிழாவில் காணாமல் போன 15 சவரன் நகை மீட்பு...

Updated On :7 ஜூலை 2026, 2:26 am IST

திருவாரூா் தோ்த்திருவிழாவில் காணாமல் போன 15 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தா்களிடம் இருந்து 31 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக புகாா்கள் பெறப்பட்டு, திருவாரூா் நகர காவல் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கென நகர காவல் ஆய்வாளா் சுப்ரியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. ஜூன் 27 ஆம் தேதி திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் தனது பாட்டியுடன் இருந்த 3 வயது குழந்தையின் கழுத்திலிருந்த 2 கிராம் தாயத்தை திருட முயன்றபோது, தஞ்சாவூா் மாவட்டம், ஊரிகுளம், புதுத்தெருவைச் சோ்ந்த கஸ்தூரி (55) பிடிபட்டாா்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா் என்பதும், திருவாரூா் தோ்த் திருவிழாவில் மற்றொரு நபருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, திருவாரூா் தோ்த்திருவிழாவில் பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளில் அவா் சோ்க்கப்பட்டு, அவரிடம் இருந்து 15 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.