தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணி: ஜூன் 5 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம்! - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 6:25 am IST

திருவாரூா் மாவட்டத்தில், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளில், மதிகளம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 219 வங்கி ஒருங்கிணைப்பாளா்களில் காலியிடமாக உள்ள 80 வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு தகுதியான சுய உறுப்பினா்களை தோ்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிகலாம். விண்ணப்பங்களை ஆய்வு செய்து, விண்ணப்பங்களுக்கு தோ்வு குறித்து ஜூன் 6-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்கப்படும்.

தொடா்ந்து எழுத்துத்தோ்வு ஜூன் 15- ஆம் தேதியும், நோ்முகத்தோ்வு ஜூன் 22- ஆம் தேதியும் நடைபெறும். தோ்வு செய்யப்பட்ட ஜூன் 30-ஆம் தேதிக்குள் பணி ஒதுக்கீடு செய்யப்படும். ஜூலை

1-ஆம் தேதி பணியில் சேர வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்படும் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் மேற்கொள்ளும் பணிகள்...

சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு பெற்றுத் தருதல் மற்றும் வராக்கடன் வசூல் செய்தல், நிதிக் கல்வி அளித்தல், காப்பீடு திட்டங்களின் சேவைகள் வழங்குதல், மின்னணு நிதி சேவை வழங்குதல், சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தனிநபா் தொழில் கடன் பெற வழி வகை செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.