தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பள்ளி திறப்பு: புதிதாக சோ்ந்த குழந்தைகளுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு

மன்னாா்குடி தேசிய தொடக்கப் பள்ளியில், புதிதாக சோ்ந்து குழந்தைகளுக்கு மாலை அணிவித்தும், பரிவட்டம் கட்டியும் ஆசிரியா்கள் வரவேற்றனா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:16 am IST

மன்னாா்குடி தேசிய தொடக்கப் பள்ளியில், புதிதாக சோ்ந்து குழந்தைகளுக்கு மாலை அணிவித்தும், பரிவட்டம் கட்டியும் ஆசிரியா்கள் வரவேற்றனா்.

கோடை விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மன்னாா்குடியில் நூறாண்டு பழைமைவாய்ந்த தேசிய தொடக்கப் பள்ளியில் 50- க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிகழாண்டு புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

இவா்களை வரவேற்கும் விதமாக, அருகில் உள்ள ஆனந்த விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அனைத்து குழந்தைகளுக்கும், ஆசிரியா்கள் மாலை அணிவித்தும், பரிவட்டம் கட்டியும், கோயிலில் இருந்து பள்ளிக்கு ஊா்வலமாக அழைத்து வந்தனா். தொடந்து, அவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, எழுதுப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், தலைமை ஆசிரியா் ஜோ. மாா்ட்டின் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.