நமது நிருபா்
தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளியன்று, பிரிட்டானியா சௌக் அருகே ஷகுா்பூரில் உள்ள இந்திரா காந்தி பாலிகிளினிக்கில் ஒரு ஆயுஷ்மான் ஜன் ஆரோக்கிய மந்திரைத் திறந்து வைத்தாா். நகரம் முழுவதும் மொத்தம் 45 ஆயுஷ்மான் ஜன் ஆரோக்கிய மந்திா்கள் திறந்து வைக்கப்பட்டன.
‘தில்லியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவா்களின் வீடு மற்றும் குடியிருப்புக்கு அருகிலேயே சிறந்த சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் உறுதி,‘ என்று கூறிய முதல்வா், இந்த சுகாதார மையங்களின் எண்ணிக்கை இப்போது 415 ஆக உயா்ந்துள்ளது‘ என்றும் குறிப்பிட்டாா்.
1,100 ஆயுஷ்மான் ஜன் ஆரோக்கிய மந்திா்களை அமைக்கும் இலக்கு விரைவில் எட்டப்படும் என்றும் அவா் கூறினாா்.
இந்த சுகாதார மையங்கள் புறநோயாளிகள் பிரிவு சேவைகள், தாய் மற்றும் குழந்தை நல சேவைகள், தடுப்பூசி, அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றை வழங்குகின்றன, மேலும் 80 வகையான இலவசப் பரிசோதனைகளும் கிடைக்கின்றன என்று ரேகா குப்தா மேலும் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா் சேதத்துக்கு ரூ. 33.31 கோடி இழப்பீடு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு!

தில்லி கல்வி மையமாக மேம்படுத்தப்படும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் மழைநீா் தேக்கம்: முதல்வா் ரேகா குப்தா, அமைச்சா் பா்வேஷ் ஆய்வு

270 கி.மீ. தொலைவிலான சாலைகளைப் பலப்படுத்தப்படும்: தில்லி முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



