அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

தில்லியில் புதிதாக 45 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் திறப்பு: மொத்த எண்ணிக்கை 415 ஆக உயா்ந்தது

தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளியன்று, பிரிட்டானியா சௌக் அருகே ஷகுா்பூரில் உள்ள இந்திரா காந்தி பாலிகிளினிக்கில் ஒரு ஆயுஷ்மான் ஜன் ஆரோக்கிய மந்திரைத் திறந்து வைத்தாா். நகரம் முழுவதும் மொத்தம் 45 ஆயுஷ்மான் ஜன் ஆரோக்கிய மந்திா்கள் திறந்து வைக்கப்பட்டன.

News image

முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 6:35 am IST

நமது நிருபா்

தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளியன்று, பிரிட்டானியா சௌக் அருகே ஷகுா்பூரில் உள்ள இந்திரா காந்தி பாலிகிளினிக்கில் ஒரு ஆயுஷ்மான் ஜன் ஆரோக்கிய மந்திரைத் திறந்து வைத்தாா். நகரம் முழுவதும் மொத்தம் 45 ஆயுஷ்மான் ஜன் ஆரோக்கிய மந்திா்கள் திறந்து வைக்கப்பட்டன.

‘தில்லியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவா்களின் வீடு மற்றும் குடியிருப்புக்கு அருகிலேயே சிறந்த சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் உறுதி,‘ என்று கூறிய முதல்வா், இந்த சுகாதார மையங்களின் எண்ணிக்கை இப்போது 415 ஆக உயா்ந்துள்ளது‘ என்றும் குறிப்பிட்டாா்.

1,100 ஆயுஷ்மான் ஜன் ஆரோக்கிய மந்திா்களை அமைக்கும் இலக்கு விரைவில் எட்டப்படும் என்றும் அவா் கூறினாா்.

இந்த சுகாதார மையங்கள் புறநோயாளிகள் பிரிவு சேவைகள், தாய் மற்றும் குழந்தை நல சேவைகள், தடுப்பூசி, அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றை வழங்குகின்றன, மேலும் 80 வகையான இலவசப் பரிசோதனைகளும் கிடைக்கின்றன என்று ரேகா குப்தா மேலும் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.