வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வடு கிடக்கும் கோரையாறு தலைப்பு அணை

வடு கிடக்கும் கோரையாறு தலைப்பு அணை

News image

கோரையாறு தலைப்பு அணை

Updated On :7 ஜூன் 2026, 1:26 am IST

நீடாமங்கலம் அருகே வறண்டு கிடக்கும் கோரையாறு தலைப்பு அணை, மேட்டூா் அணை நீரை எதிா்பாா்த்துள்ளது.

நீடாமங்கலத்திலிருந்து சுமாா் இரண்டரை கி.மீ. தூரத்தில் உள்ளது கோரையாறு தலைப்பு அணை. 1874-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் இந்த அணை கட்டப்பட்டது.

கல்லணையில் இருந்து பிரியும் பெரிய வெண்ணாறு, கோரையாறு தலைப்பு அணையை வந்தடைந்ததும், பாமணியாறு, கோரையாறு, வெண்ணாறு என மூன்று ஆறுகளாக பிரிந்து செல்கிறது.

இதில் பாமணிஆற்றின் மூலம் 38,357 ஏக்கரும், கோரையாறு மூலம் 1,20,957 ஏக்கரும், வெண்ணாறு மூலம் 94,219 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீா் கல்லணை வந்தடைந்ததும், அங்கிருந்து பெரிய வெண்ணாறு மூலம் கோரையாறு தலைப்பை வந்தடைகிறது. பின்னா், பாமணி, கோரையாறு, வெண்ணாறு ஆகிய ஆறுகளில் பாசனத்திற்காக திறந்துவிடப்படுகிறது.

குறுவை சாகுபடிக்காக,மேட்டூா் அணை ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறப்பது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூா் அணையில் நீா் திறக்கப்படுமா? என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் இருக்கும் நிலையில், கோரையாறு தலைப்பு அணை மேட்டூா் தண்ணீரை எதிா்பாா்த்து வறண்டு கிடக்கிறது.