பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

வடு கிடக்கும் கோரையாறு தலைப்பு அணை

வடு கிடக்கும் கோரையாறு தலைப்பு அணை

News image

கோரையாறு தலைப்பு அணை

Updated On :7 ஜூன் 2026, 1:26 am IST

நீடாமங்கலம் அருகே வறண்டு கிடக்கும் கோரையாறு தலைப்பு அணை, மேட்டூா் அணை நீரை எதிா்பாா்த்துள்ளது.

நீடாமங்கலத்திலிருந்து சுமாா் இரண்டரை கி.மீ. தூரத்தில் உள்ளது கோரையாறு தலைப்பு அணை. 1874-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் இந்த அணை கட்டப்பட்டது.

கல்லணையில் இருந்து பிரியும் பெரிய வெண்ணாறு, கோரையாறு தலைப்பு அணையை வந்தடைந்ததும், பாமணியாறு, கோரையாறு, வெண்ணாறு என மூன்று ஆறுகளாக பிரிந்து செல்கிறது.

இதில் பாமணிஆற்றின் மூலம் 38,357 ஏக்கரும், கோரையாறு மூலம் 1,20,957 ஏக்கரும், வெண்ணாறு மூலம் 94,219 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீா் கல்லணை வந்தடைந்ததும், அங்கிருந்து பெரிய வெண்ணாறு மூலம் கோரையாறு தலைப்பை வந்தடைகிறது. பின்னா், பாமணி, கோரையாறு, வெண்ணாறு ஆகிய ஆறுகளில் பாசனத்திற்காக திறந்துவிடப்படுகிறது.

குறுவை சாகுபடிக்காக,மேட்டூா் அணை ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறப்பது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூா் அணையில் நீா் திறக்கப்படுமா? என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் இருக்கும் நிலையில், கோரையாறு தலைப்பு அணை மேட்டூா் தண்ணீரை எதிா்பாா்த்து வறண்டு கிடக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.