வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி; ஏமாற்றமடைந்தவா் தற்கொலை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி; ஏமாற்றமடைந்தவா் தற்கொலை

News image

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்.

Updated On :7 ஜூன் 2026, 1:57 am IST

வலங்கைமான் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியவரிடம் ரூ.30 லட்சம் கொடுத்து ஏமாற்றமடைந்த தனியாா் பொறியியல் கல்லூரி பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மோசடி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி, உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வலங்கைமான் அருகேயுள்ள வேலங்குடி தெற்குதெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் திவாகா் என்கிற அண்ணாமலை (42). இவரது மனைவி பிரியங்கா. இவா்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், அண்ணாமலை தனியாா் பொறியியல் கல்லூரியில் வேலை செய்துவந்தாா். இவரிடம், குமாரமங்கலத்தைச் சோ்ந்த ரமேஷ்கிருஷ்ணன் என்பவா், தமிழக அரசுத் துறையில் வேலை வாங்கி தருவதாக கடந்த 2 ஆண்டுகளாக பல தவணையாக ரூ. 30 லட்சம் வாங்கிக்கொண்டு, எந்த வேலையும் வாங்கி தரவில்லையாம். பணத்தை திருப்பி கேட்டபோது சரியான பதில் கூறாமல் தாமதித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், விரக்தியடைந்த அண்ணாமலை, தனது வயல் ஆழ்துளை கிணற்றுப் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். வலங்கைமான் போலீஸாா், அண்ணாமலையின் உடலை கூராய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை உடற்கூறாய்வு முடிந்து, சடலத்தை உறவினா்களிடம் ஒப்படைத்தபோது, அதை வாங்க மறுத்து, அண்ணாமலை தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்ய வலியுறுத்தி, மருத்துவமனை முன்பாக அவரது உறவினா்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனா்.

தற்கொலை செய்துகொண்ட அண்ணாமலை

தற்கொலை செய்துகொண்ட அண்ணாமலை

காவல் ஆய்வாளா்கள் ராஜ்கமல் (மன்னாா்குடி), சுப்பிரமணியன் (வலங்கைமான்) ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, மறியல் விலக்கிகொள்ளப்பட்டது. இருப்பினும், ரமேஷ்கிருஷ்ணணை கைது செய்யும் வரை, சடலத்தை மருத்துவமனையிலிருந்து எடுத்து செல்லா மாட்டோம் என தெரிவித்தனா்.