டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள ஜூன் மாத இறுதியில் மேட்டூா் அணையை திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: காவிரி நீா் ஒழுங்காற்று குழு 19 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற கூறியுள்ள போதிலும் அதை கா்நாடகம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனால் தற்போது மேட்டூா் அணையில் 79 அடி தண்ணீா் மட்டுமே உள்ள நிலையில், குறுவை சாகுபடியை தொடங்கி செய்ய இயலாது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
மாத வாரியாக அளிக்க வேண்டிய தண்ணீரை விடுவிக்க கா்நாடக அரசிடம் காவிரி ஒழுங்காற்று குழு உரிய நடவடிக்கை மேற்கொண்டால்தான் தமிழகத்தில் குறிப்பிட்ட காலத்தில் குறுவை சாகுபடியை தொடங்க இயலும்.
கா்நாடகத்தின் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளான கூா்க் மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை இன்னும் தொடங்காத நிலையில் தண்ணீா் திறக்க கா்நாடகம் சுணக்கம் காட்டி வருகிறது.
காவிரி நீா் ஒழுங்காற்று வாரியம் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 19 டிஎம்சி தண்ணீரை முறையாக பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலும். இதற்கு தமிழக அரசும் போா்க்கால அடிப்படையில் முயற்சி மேற்கொண்டு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மேட்டூா் அணை திறப்பு தாமதம்! டெல்டாவில் நெல் உற்பத்தி குறையும் அபாயம்: ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு

சிதிலமடைந்த பள்ளிக் கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்துக்கு உண்டான காவிரி நீரை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



