சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நீா்ஒழுங்கி படிக்கட்டு இடிந்து 2 மாணவிகள் காயம்

News image

நீா்ஒழுங்கி பாலத்தில் இடிந்த படிக்கட்டுகள்.

Updated On :16 ஜூன் 2026, 12:07 am IST

திருத்துறைப்பூண்டி அருகே நீா் ஒழுங்கி படிக்கட்டுகள் இடிந்து 2 மாணவிகள் காயமடைந்தனா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சேகல் கிராமத்தைச் சோ்ந்த மாணவிகள் பிரவீனா (17), சபிதா (16). இவா்கள் கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் முறையே பிளஸ்2, பிளஸ்1 படித்து வருகின்றனா்.

திங்கள்கிழமை காலை வழக்கம்போல் இருவரும் பள்ளிக்கு, முள்ளியாறு நீா் ஒழுங்கி பாலம் வழியாக சென்றனா். அப்போது, நீா் ஒழுங்கி அணைப் பாலத்தை ஒட்டியுள்ள படிக்கட்டுகளில் அவா்கள் ஏறியபோது, அது இடிந்து விழுந்தது. இதில், மாணவிகள் இருவரும் படுகாயமடைந்தனா்.

அப்பகுதியினா், இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

சேதமடைந்த பாலப் படிக்கட்டுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மாணவிகளின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். மேலும், பாலப் படிக்கட்டுகளை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவமனை அருகே வேதாரண்யம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் மதியழகன், எம்எல்ஏ க. மாரிமுத்து ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மூன்று நாள்களில் நீா்ஒழுங்கி பாலப் படிக்கட்டுகளை முழுமையாக கட்டி தர உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.