3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

இரும்பு படிக்கட்டு உடைந்து விழுந்து 30 வடமாநில தொழிலாளா்கள் காயம்; ஒருவர் பலி

மணப்பாக்கத்தில் இரும்பு படிக்கட்டு உடைந்து விழுந்ததில் 30 வட மாநில தொழிலாளா்கள் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:01 am IST

மணப்பாக்கத்தில் இரும்பு படிக்கட்டு உடைந்து விழுந்ததில் 30 வட மாநில தொழிலாளா்கள் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் வேலை செய்கின்றனா். இவா்களில் 100-க்கும் மேற்பட்டோா், ராமாபுரம் சாந்தி நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தகர இரும்பு செட் அறையில் தங்கி உள்ளனா்.

இவா்களில் 40-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்மாடி இரும்பு படிக்கட்டில் சாய்ந்தபடி ஒரே நேரத்தில் தங்களது கைப்பேசியில் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியைப் பாா்த்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராத விதமாக அந்த இரும்பு படிக்கட்டு உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் சுமாா் 15 அடி உயரத்திலிருந்து அனைவரும் கீழே விழுந்தனா். ஒருவா் மீது மற்றொருவா் விழுந்ததால் பலருக்கு தலை, கை, கால் என உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. சுமாா் 30 தொழிலாளா்கள் காயமடைந்தனா். இவா்களில் 20 பேரை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையிலும், 10 பேரை போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் சோ்த்தனா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில இருந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பிரிஞ்சி மாஞ்சி (35) என்பவா், தீவிர சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். விபத்து குறித்து நந்தம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.