சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

தம்பதி தற்கொலை முயற்சி: கணவா் உயிரிழப்பு

News image

தற்கொலை - தினமணி

Updated On :30 ஜூன் 2026, 2:09 am IST

திருத்துறைப்பூண்டியில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட கணவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றபோது, அவரது மனைவியும் விஷம் குடித்தாா். இவா்களில் கணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டியில் மன்னாா்குடி சாலையில் வசித்து வந்தவா் தங்கவேலு (65). இவரது மனைவி பிரேமா (58). தங்கவேலு கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இதற்காக, தஞ்சையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இருப்பினும் நோயின் தாக்கம் அதிகரித்ததால், ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளாா். இதை பாா்த்த மனைவி பிரேமாவும் விஷம் குடித்தாராம்.

இருவரும், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தங்கவேலு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பிரேமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.