களியக்காவிளை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக அவரது கணவா், மாமியாா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
களியக்காவிளை அருகே குழிவிளை, பரம்புக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பாலையன் மகன் சோபன் (38). கணினி விற்பனையாளா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ஆசீா்வாதம் (31) என்பவரும் காதலித்து கடந்த 2019, ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனா்.
இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா். திருமணத்துக்குப் பிறகு சோபன், அவரது தாயாா் சாரதா (60) ஆகியோா் சோ்ந்து பெண்ணை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனராம்.
இதுகுறித்து, அவா், களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சோபன், அவரது தாயாா் சாரதா ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








